வரிசை எண் 5479
ஜாதகர் ஆண் பிறந்த தேதி 08-09-1976 பிறந்த
நேரம் 06:55 முற்பகல் பிறந்த இடம் சென்னை. ஆளும் கிரகம் எடுத்த தேதி 09.12.2018 ஆளும் கிரகம் எடுத்த நேரம் 11.36.00 பிற்பகல் ஆளும் கிரகம் எடுத்த இடம் காஞ்சிபுரம். ஆளும் கிரகம் மூலமாக பிறந்த நேரத்தை திருத்திய நேரம் 06.55.00 முற்பகல் ஜாதகர் பணி புரியும்
இடத்தில் காதல் திருமணம் செய்துக்கொண்டார்.
தொழில் முறை உயர் கணித சார ஜோதிட முறையில் தன்னுடன் பணிபுரியும் பெண்ணை யார்
காதல் திருமணம் செய்வார்?ஜாதக ஆய்வு 2
ஒருவருக்கு காதல் ஏற்படுவதற்கான விதிகள்
5ம் பாவம் என்பது ஜோதிடத்தில் காதல் மற்றும் ஆழ்ந்த சிந்தனையை (குறிப்பிட்ட ஒருசில செயல்களில் அதிக நாட்டம்), கலை துறை, உடல் உழைப்பு இல்லாத தன்மை போன்ற பாவகாரகங்களை கொண்டுள்ளது. காதல் வயப்பட்டவர்கள் அனைவரும் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி இருப்பதற்கு இந்த 5ம் பாவ காரகமே காரணமாகும்.
அதே போல் உண்மை
காதல் என்பது எதிரிப்லரின் பொருளாதாரம் (வரட்சனை,சீர்) தொழில்
போன்றவைகளை பொருத்து எப்போதும் வருவதில்லை, ஜோதிட ரீதியாக 5ம் பாவம் என்பது 2,10ம் பாவங்களுக்கு 4,8ம் பாவமாக அமைவதை இங்கு காணலாம்.
5ம் பாவம் 5,7,11ம் பாவங்களை தொடர்பு கொண்டால் ஜாதகருக்கு காதல் வாழ்க்கையில் வெற்றிபெறுவார்.
5ம் பாவம் 4,10ம் பாவங்களை தொடர்பு கொண்டால் ஜாதகருக்கு காதல் வாழ்க்கையில் தோல்வி ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
5ம் பாவம் 1,5,8ம் பாவங்களை தொடர்பு கொண்டால் ஜாதகருக்கு காதல் மூலம் அசிங்கம் அவமானம் உண்டு.மேலும் சனி, செவ்வாய் மேற்கண்ட பாவங்களுக்கு உப நட்சத்திரமாக இருந்தால் பெரியளவில் சண்டை, சச்சரவுகள் ஏற்படும்.
5ம் பாவம் 5,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டால் ஜாதகருக்கு காதல் தொழில், பணம், கௌரவம் அனைத்தும் இழந்து நடுதெருவுக்கு வரும் சூழ்நிலையை காட்டும்.
5ம் பாவம் 5,11ம் பாவங்களை
தொடர்பு கொண்டால் ஜாதகருக்கு காதல் காதலாக மட்டும் இருந்து திருமணத்திற்கு
முன்பாகவே தாம்பதியத்தில் ஈடுபடும் அமைப்பாக இருக்குமே ஒழிய திருமணம் வரை செல்லாது.
5ம் பாவம் 6,12ம் பாவங்களை தொடர்பு கொண்டால் ஜாதகருக்கு காதல் திருமணம் வரை செல்லாது.
5ம் பாவம் 5,9 ம் பாவங்களை தொடர்பு கொண்டால் ஜாதகருக்கு காதல் கள்ள காதலாக அமையும். அதாவது ஏற்கனேவே திருமணமான வரை ஜாதகர் கள்ள காதல் கொள்ள வாய்ப்பு உண்டு.
5ம் பாவம் 3,5,9,11 ம் பாவங்களை
தொடர்பு கொண்டால் காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு (ஊரை) ஓடி செல்வராக
இருப்பார்கள். மேலும் சில சமயங்களில் இருவரும் ஏற்கனவே திருமணமான வர்களாகவும்
இருக்கவும் வாய்ப்பு உண்டு. ஏன்னெனில் 9ம் பாவம்
தொடர்புகளை குறிக்கும்.
5ம் பாவம் 2,8 ம் பாவங்களை தொடர்பு கொண்டால் காதலர்களிடம் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும்.
5ம் பாவம் 5,7,9,11 ம் பாவங்களை
தொடர்பு கொண்டால் ஜாதகருக்கு ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுடன் காதல்
கொள்வார்.
5ம் பாவம் 4,6,8,10 ம் பாவங்களை
தொடர்பு கொண்டால் ஜாதகர் யாரையும் காதலிக்க முடியாது. யாரையும் காதலித்தாலும் அது
தோல்வியில் தான் முடியும்.
5ம் பாவம் 3,8,10 ம் பாவங்களை
தொடர்பு கொண்டால் ஜாதகருக்கு காதல் தோல்வியால் சித்த பிரமை பிடிக்கும்.
விதிகள் ஒட்டி ஜாதக ஆய்வு
1ம் பாவ விதிக்கொடுப்பினை
லக்ன உப
நட்சத்திரம் புதன் 1,3,9ம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாகவும்,1,10ம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாகவும் உள்ளார்.
லக்ன உப
நட்சத்திரம் புதன் நின்ற நட்சத்திரம் சந்திரன் 8ம் பாவத்திற்கு
உபஉப நட்சத்திரமாகவும் உள்ளார்.
நட்சத்திரம்
காட்டிய பாவத்திற்க்கு உப நட்சத்திரம் 8,12ம் பாவங்களை காட்டினால் நட்சத்திரம் காட்டிய பாவங்களின் சம்பவம் உடனே
துண்டிக்கும்(உடனே துண்டிக்கும் என்பதை புரிதல்லுக்காக 10 சதவீதம் செயல்பட்டு துண்டிக்கும்)என்று பொருள் கொள்க
நட்சத்திரம் காட்டிய பாவத்திற்கு உப நட்சத்திரம் 2 ம் பாவத்தை காட்டினால் நட்சத்திரம் காட்டிய பாவங்களின் சம்பவம் ஒரு குறிப்பிட்ட அளவிற்குள்ளாக செயல்பட்டு துண்டிக்கும் (ஒரு குறிப்பிட்ட அளவிற்கு செயல்பட்டு என்பதை பு புரிதல்லுக்காக 40 சதவீதம் செயல்பட்டு துண்டிக்கும்)என்று பொருள் கொள்க
நட்சத்திரம் காட்டிய பாவத்திற்கு உப நட்சத்திரம் சாதகமான பாவத்தை காட்டினால் நட்சத்திரம் காட்டிய பாவங்களின் சம்பவம் தொடர்ந்து செயல்பட்டு வலிமையடையும்.
புதன் நின்ற உப
நட்சத்திரம் குரு 7,12ம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாகவும் உள்ளார்.
நட்சத்திரம் காட்டிய 8ம் பாவத்திற்கு 12ம் பாவத்தை உப நட்சத்திரம் காட்டியதால் நட்சத்திரம் காட்டிய பாவம் 10 சதவீதம் செயல்பட்டு துண்டிக்கபடும்.
குரு வைத்துள்ள 7,12 பாவங்களில் 7ம் பாவத்திற்கு 12ம் பாவம் 6ம் பாவமாக வரும்,12ம் பாவத்திற்கு 7ம் பாவம் 8ம் பாவமாக வரும். இதனால் 12ம் பாவத்தை செயல்படுத்தாமால் 7ம் பாவத்தை மட்டும் குரு செயல்படுத்துவார்
புதன் கையில்
வைத்துள்ள 1,3,9ம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாகவும்,1ம் பாவத்திற்கு உபஉப நட்சத்திரமாகவும்
உள்ளதால்3,9ம் பாவங்களை விட 1ம் பாவத்தை
வலிமையாக புதன் (புரிதலுக்காக உப நட்சத்திரம் 60+உபஉப நட்சத்திரம் 25 சதவீதம் =85 சதவீதம்)
செயல்படுத்துவார்.
1,3,9ம் பாவங்கள் 7ம் பாவத்தை
தொடர்பு கொண்டதால் ஜாதகர் லக்னத்தின் பரிமாண பாவமான 3ம் பாவத்தை தொடர்பால் ஜாதகருக்கு சிந்தனை விரிவாக்கம், கற்பனை திறன்,ஜாதகர் தன்னை
பற்றி விளம்பரம்படுத்திக் கொள்வார், ஜாதகரை பற்றி நல்ல தகவல்கள் வெளியே இருக்கும்.தனக்கு சமமான நபர்களோடு பழகுவார்,ஓரு கூட்டத்தோடு சேர்ந்துயிருப்பார்.தர்ம சிந்தனையோடு,பாரபரியம் பழக்கவழக்கதோடு இருப்பார்.லக்னம் எந்த பாவங்களை தொடர்பு கொண்டுள்ளதோ
அந்த பாவங்களின் சிந்தனைகளோடு ஜாதகர் இருப்பார்.
5ம் பாவ விதிக்கொடுப்பினை
5ம் பாவ உப நட்சத்திரம் சனி ஆவார்.சனி 5ம் பாவத்தோடு 7,11ம் பாவங்களுக்கும் உப நட்சத்திரமாகவும்,3,7,11ம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாகவும் உள்ளார்.
5ம் பாவ உப நட்சத்திரம் சனி நின்ற நட்சத்திரம் உப நட்சத்திரம் இரண்டும் புதன் ஆவார்.புதன் 1,3,9ம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாகவும்,1,10ம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாகவும் உள்ளார்.
ஒரு கிரகம் நின்ற
நட்சத்திரம், உப நட்சத்திரமும் ஒரே கிரகமாக இருந்தால் சாதக பாதக
நடுநிலையை உபஉப நட்சத்திரம் காட்டும் என்ற விதிபடி.
சனி நின்ற உபஉப நட்சத்திரம் குரு 7,12ம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாக உள்ளார்.
உப நட்சத்திரம்
காட்டிய1,3,9ம் பாவங்களுக்கு 7,12ம் பாவங்களில் 12ம் பாவம் நீர்த்துவிடும்.7ம் பாவம் 1,3,9ம் பாவங்களை வலிமையடை செய்கிறது.
5ம் பாவத்தில் அகம் சார்ந்த காரங்களை ஜாதகர் சிறப்பாக அடைய
விதிக்கொடுப்பினை நன்றாக உள்ளது.
லக்ன கொடுப்பினையும் அகம் சார்ந்த கொடுப்பினை நன்றாக அனுபவிப்பதற்கு சாதகமாக உள்ளது.
காதலுக்கு கிரக காரகம் சுக்கிரன்
சுக்கிரன் 2,3,4 ம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாக உள்ளார்.சுக்கிரன் நின்ற நட்சத்திரம் சந்திரன் 8ம் பாவத்திற்கு உபஉப நட்சத்திரமாகவும் உள்ளார். சுக்கிரன் நின்ற உப நட்சத்திரம் குரு 7,12ம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாக உள்ளார்.
நட்சத்திரம்
காட்டிய 8ம் பாவத்திற்கு உப நட்சத்திரம் குரு 12ம் பாவத்தை காட்டுவதால் 8ம் பாவம் உடனே
துண்டிக்கபடும். சுக்கிரனும் அகம் சார்ந்த பாவ காரகங்களை அனுபவிப்பதர்க்கு சாதகமாக
உள்ளார்.
சுக்கிரன்
தன்னுடைய கையில் 5ம் பாவத்திற்கு 11ம் பாவமான 3ம் பாவத்திற்கு உபஉப நட்சத்திரமாக இருந்து 7ம் பாவத்தை தொடர்பு கொள்ளுவது காதலுக்கு சிறப்பான அமைப்பு ஆகும்.அதே நேரத்தில்
சுக்கிரன் கையில் உள்ள 2,4ம் பாவங்கள் 7ம் பாவத்தை
தொடர்பு கொள்ளவதால் அந்த பாவங்கள் வலிமை குன்றும். 5ம் பாவத்திற்கு 12ம் பாவமான 4ம் பாவம் வலிமை
குன்றி செயல்படும் போது ஜாதகர் அதிக அளவில் 5ம் பாவ
காரகங்களில் ஈபடுவார்.
நடக்கும் தசை, புத்திகள்
முதல் காதல்
என்பது பொதுவாக 16 வயது மதல் 30 வயதிற்குள் நடைபெறும் ஒரு செயல் ஆகும். அந்த காலகட்டங்களில்
விதியும், மதியும் 5,7ம் பாவங்களுக்கு
சாதகமான சூழ்நலையில் இருக்கும் போது அது திருமணம் வரை செல்லும்.
வதி நன்றாக
இருந்து மதி தடுத்தால் காதலில் தோல்வியே ஏற்படும்.
5ம் பாவத்திற்கு சாதகமான திசை, புத்திகள் வாழ்க்கையின் பின் பகுதிகிளில் (30 வயதிற்கு மேல்) வரும் போது 5ம் பாவத்தின் மற்ற காரகங்களான குழந்தை பாக்யம், உடல் உழைப்பற்ற தன்மை, தொழிலில் பிரச்சனை போன்றவைகள் ஏற்படும்.
ஒரு குறிப்பிட்ட
பாவ செயலுக்கு விதி நல்ல கொடுப்பினை அளித்தாலும் கூட மதியாகிய தசா, புத்திகள் அந்த பாவ செயலுக்கு எதிர்ப்புகளை காண்பித்தால்
அது தற்காலிகமாக நடைபெறாது.
சுமார் 15 வயதிவரைக்கும் உடல் ஆரோக்கியத்தை குறிக்கும்,விளையாட்டையும்,கல்வியில் ஆழ்ந்த ஈடுபாடும் தரும்.
சுமார் 15 முதல் 25 வயது வரைக்கும் காதல்,உயர் கல்வி போன்றவற்றில் ஈடுபாட்டை குறிக்கும்.
சுமார் 25 கடைசி காலம் வரைக்கும் குழந்தை பிறப்பு,கமிசன்,தொழில் பிரச்சனை உடல் உழைப்பு இல்லாத தன்மை,கலை துறை,உடல் ஆரோக்கியம்,உடல் உறவு என நிறை
காரகங்கள் மூலம் இயங்கும்.
விதிக்கொடுப்பினை
தந்ததை மதி என்ற தசை சரியான பருவ வயதில் வரும் போது மதி எனற தசை தர எவ்வித
தடைகளும் இல்லை.
ஜீலை 2000 ஆண்டியில் காதல் பதிவு திருமணம் வீட்டிற்கு தெரியாமல்
செய்துக்கொண்டார்.
சனி தசை 09.05.1997 முதல் 09.05.2016 வரை நடைபெற்றது.
சனி தசையில் புதன் புத்தியில் புதன் அந்தரத்தில் பதிவு திருமணம் நடைபெற்றது.
சனி 1,3,7,9ம் பாவங்களை தொடர்புகொண்டுள்ளது. புத்திநாதன் புதன் 7ம் பாவத்தை தொடர்பு கொண்டுள்ளது.
விதிக்கொடுப்பினை மதி என்ற தசையாக வரும் விதிக்கொடுப்பினையை மதி என்ற தசை தர தடை ஏதும் இல்லை.
சனியுடைய ஏஜென்டாக சூரியன் இருந்து வலிமையாக 2,4,5,11ம் பாவங்களை தொடர்பு கொண்டுள்ளது.
திருமணம் நடக்கும் போது 24 வயது முடிகிறது.அந்த காலகட்டத்தில் ஜாதகர் வேளைக்கு செய்துகொண்டுள்ளார்.
5ம் பாவ தசை எந்த காலகட்டத்தில் ஒருவருக்கு வருகிறதோ அந்த
கால கட்டத்திற்கு ஏற்ப காதல் ஏற்படும்.
சூரியன்,செவ்வாய்,ராகு ஆகிய மூன்று கிரகங்கள் சனியின் உப நட்சத்திரத்தில்
உள்ளன.ஒரு பாவ செயலை எடுத்த நடத்த பல கிரகங்கள் இருக்கும் போது அந்த பாவ காரகங்களை
ஜாதகர் திரும்ப திரும்ப அனுபவிப்பதற்கு ஏதுவாகும்.
சூரியன் சனி
பகவானின் ஏஜெண்டாக செயல்படு வதால், ஒரு கிரகம் சூரியன் அதிகாரமிக்கவர் அவரே 6,10ம் பாவங்களு அதிபதியாக வந்து வலிமைய டைவதால் ஜாதகர் தன்னுடைய காதலில் உறுதியோடு
இருந்து வீட்டியில் அனைவரின் எதிர்பையும் மீறி ரகசிய பதிவு திருமணம்
செய்துக்கொண்டார்.
திருமணம் ஆன பிறகு
சில மாதங்கள் கழித்து இவர்களை அவர்களுடை பெற்றோர்கள் ஏற்றுக்கொண்டனர்.2,6,10ம் பாவங்கள் கர்மம் திரிகோணம் என்பதால் ஜாதகர் தன்னுடன்
பணிபுரியும் பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.6ம் பாவம் 2,4,5,11ம் தொடர்பால் ஜாதகர் தனக்கு சம்மில்லாத நபரை திருமணம்
செய்துக்கொண்டார்.6ம் பாவம் என்பது தனக்கு சம்மில்லாதவரை குறிக்கும்.
எனக்கு சமமானவர் என்பது அதாவது வாழ்க்கை துணை,வாடிக்கையாளர்,கூட்டாளி,சமுகம் போன்றவற்றை 7ம் பாவம் குறிக்கும்,6ம் பாவம் என்பது எனக்கு
சமமில்லாவர்களை குறிக்கும்,அதாவது வேளைக்காரர்கள் ,நோய் கிருமிகள்,வீட்டு விலங்குகள்
போன்றவற்றை 6ம் பாவம் குறிக்கும்.2,6,10ம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக உள்ள சூரியன் 5,7,11அதிபதியான சனி ஏஜெண்டாக
செய்லபடுகிறார்.சூரியன் தொடர்பு2,4,5,11 என்பதால் 6ம் பாவ வலிமை பெற்றதால் தனக்கு சமமில்லாதவரை திருமணம்
செய்துக்கொண்டார்.அதாவது பொருந்தாத திருமணம் என்று
கூறலாம்.
அற்புதமான ஐயா
ReplyDelete