வரிசை எண்
5263 பெயர் கோபண்ணா பிறந்த
தேதி 25.03.1973 பிறந்த நேரம் 12.45.00 பிற்பகல் பிறந்த இடம் ஆற்காடு. பிறந்தநேரத்தை
திருத்தி நேரம் 12.43.20 பிற்பகல் ஆளும் கிரகம் எடுத்த தேதி 28.06.2014 ஆளும்
கிரகம் எடுத்த நேரம் 12.41.18 பிற்பகல் ஆளும் கிரகம் எடுத்த இடம் சென்னை,போரூர்.
விதி 1
லக்னம் கொடுப்பினை 7ஆம் பாவத்திற்க்கு சாதகமா அல்லது
பாதகமா என்று பார்பது?
லக்ன உப நட்சத்திரமாக குரு இருந்து அவர் நின்ற
நட்சத்திரம்,உப நட்சத்திரம் மூலமாக 4,8,10,12ம் பாவங்களை தொடர்பு கொண்டு12ம்
பாவங்களில் உள்ள அகம் சார்ந்த விஷயங்களை ஜாதகர் அனுபவிப்பதற்கு எதிராக உள்ளது.
விதி 2
7ஆம் பாவம் தன்னுடைய பாவத்திற்க்கும் சாதகமான அல்லது
பாதகமான பாவங்களை தொடர்புகொண்டுள்ளதா?
7ம் பாவ உப நட்சத்திரமாக குரு இருந்து அவர் நின்ற
நட்சத்திரம்,உப நட்சத்திரம் மூலமாக 4,8,10,12ம் பாவங்களை தொடர்பு கொண்டு7ம்
பாவத்தில் உள்ள அகம் சார்ந்த விஷயங்களை ஜாதகர் அனுபவிப்பதற்கு எதிராக உள்ளது.
விதி 3
7ஆம் பாவம் லக்ன பாவத்திற்க்கு சாதகமான அல்லது பாதகமான
பாவங்களை தொடர்புகொண்டுள்ளதா?
7ம் பாவ உப நட்சத்திரமாக குருவாக இருந்து அவர் நின்ற
நட்சத்திரம்,உப நட்சத்திரம் மூலமாக 4,8,10,12ம் பாவங்களை தொடர்பு கொண்டு 7ஆம்
பாவம் லக்ன பாவத்திற்க்கு பாதகமான பாவங்களை தொடர்புகொண்டுள்ளது.இதனால் 7ம்
பாவத்தில் உள்ள அகம் சார்ந்த விஷயங்களை ஜாதகர் அனுபவிப்பதற்கு எதிராக உள்ளது.
விதி 4
களத்திர காரகன் சுக்கிரன் 7ஆம் பாவத்திற்க்கு சாதகமான
அல்லது பாதகமான பாவங்களை தொடர்புகொண்டுள்ளதா?
களத்திர காரகன் சுக்கிரன் 9,12ம் பாவங்களுக்கு உப
நட்சத்திரமாக இருந்து அவர் நின்ற நட்சத்திரம்,உப நட்சத்திரம் மூலமாக 2,4,8,12ம்
பாவங்களை தொடர்பு கொண்டு 7ஆம் பாவத்திற்கு பாதகமான பாவங்களை தொடர்புகொண்டுள்ளார்.இதனால்
7ம் பாவத்தில் உள்ள அகம் சார்ந்த விஷயங்களை ஜாதகர் அனுபவிப்பதற்கு எதிராக உள்ளது.
விதி 5
நடப்பு தசை மற்றும் புத்திகள் லக்னம் மற்றும் 7ஆம்
பாவத்திற்கு சாதகமான அல்லது பாதகமான பாவங்களை தொடர்புகொண்டுள்ளதா?
ஜாதகருக்கு திருமணம் நடந்த தேதி 06.12.2009
அப்பொழது ஜாதகருக்கு வயது 36 வயது 8 மாதம் 11 நாட்கள் ஆகும். 20.01.2011யில் பெண்
குழந்தை பிறக்கிறது.
சூரிய
தசையில் சந்திர புத்தியில் ராகு அந்தரத்தில்,சந்திர சூட்சமத்தில் திருமணம் நடந்தது
சூரியன் 3,6ம் பாவங்களுக்கு உப
நட்சத்திரமாக இருந்து தான் நின்ற நட்சத்திரம் மலமாக 4,8,12ம் பாவங்களை தொடர்பு
கொள்கிறது.4,8,12ம் பாவங்கள் என்பது சூரியன் கையில் உள்ள 3ம் பாவத்தை
கெடுத்துக்கொண்டும் 6ம் பாவத்தை பலமாக வளர்த்துக்கொண்டும் இருக்கும்.
சூரிய
தசையில் சந்திர புத்தியில் திருமணம் நடந்தது
சூரிய தசையில்
சந்திர புத்தியில் சந்திர நின்ற நட்சத்திரம் சூரியன் ஆகும், சந்திரன் நின்ற உப
நட்சத்திரம் சந்திரன் ஆகும்.
சந்திரன் 4,8,12ம் பாவங்களுக்கு ஆரம்ப முனை
நட்சத்திரமாக உள்ளார். சந்திரன் நின்ற நட்சத்திரம் சூரியன் 3,6ம் பாவங்களுக்கு உப
நட்சத்திரமாகவும் சந்திரன் நின்ற உப நட்சத்திரம் சந்திரன் 4,8,12ம் பாவங்களுக்கு
ஆரம்ப முனை நட்சத்திரமாக உள்ளார்.சந்திரன் தொடர்பு 3,6ம் பாவங்கள்
ஆகும்.
விதி 6
7ஆம் பாவ உபநட்சத்திர அதிபதி தான் நின்ற நட்சத்திரம்
உபநட்சத்திரம் மூலமாக 6,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டால் 7ம் பாவம் 60 சதவீதம்
பாதிப்பு அடைந்துள்ளது?
7ம் பாவ உப நட்சத்திரமாக குரு இருந்து அவர் நின்ற
நட்சத்திரம்,உப நட்சத்திரம் மூலமாக 4,8,10,12ம் பாவங்களை தொடர்பு கொண்டு 7ம்
பாவத்தில் உள்ள அகம் சார்ந்த விஷயங்களை ஜாதகர் அனுபவிப்பதற்கு எதிராக உள்ளது.
விதி 7
7ஆம் பாவ உபஉபநட்சத்திர அதிபதி தான் நின்ற நட்சத்திரம்
உபநட்சத்திரம் மூலமாக 6,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டால் 7ம் பாவம் 25 சதவீதம்
பாதிப்பு அடைந்துள்ளது?
7ம் பாவ உப உப நட்சத்திரமாக சுக்கிரன் இருந்து அவர்
நின்ற நட்சத்திரம்,உப நட்சத்திரம் மூலமாக 2,4,8,10ம் பாவங்களை தொடர்பு கொண்டு 7ம்
பாவத்தில் உள்ள அகம் சார்ந்த விஷயங்களை ஜாதகர் அனுபவிப்பதற்கு எதிராக உள்ளது.
விதி 8
7ஆம் பாவ ஆரம்பமுனை நட்சத்திர அதிபதி தான் நின்ற
நட்சத்திரம் உபநட்சத்திரம் மூலமாக 6,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டால் 7ம் பாவம்
15 சதவீதம் பாதிப்பு அடைந்துள்ளது?
7ம் பாவ ஆரம்பமுனை நட்சத்திரமாக சுக்கிரன் இருந்து அவர்
நின்ற நட்சத்திரம்,உப நட்சத்திரம் மூலமாக 2,4,8,10ம் பாவங்களை தொடர்பு கொண்டு 7ம்
பாவத்தில் உள்ள அகம் சார்ந்த விஷயங்களை ஜாதகர் அனுபவிப்பதற்கு எதிராக உள்ளது.
விதி 9
7ம் பாவம் பாதிக்கபட்டுருக்கும் பொழுது 5ம் பாவம் தன்னுடைய
பாவத்திற்கும், லக்னத்திற்கும் சாதகமான பாவங்களை கண்டிப்பாக
தொடர்புக்கொண்டுடிருக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளபடுகிறது.ஏனெனில் 5ம்
பாவத்தில் காதல் வயப்படுதல்,இன்ப உணர்வுகளை அதிகமாக நுகருதல்,எதையும் உணர்வு
பூர்வமாக சிந்தித்தல்,ரசனை,சிற்றின்ம்பம் அதிகமான நாட்டம், உடலைசிறிதும்
வருத்தாமல் இருத்தல்,கவர்ச்சிகளுக்கு எளிதில் மயங்குதல்,கற்பனை கலந்த உணர்வுகள்,
உல்லாசம்,சல்லாபம்,காமம்,தாம்பத்தியம்,கலை,தன்னை அழகுபடுத்திக்கொள்ளுதல்,
பொழுதுபோக்கு விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வது, ஹார்மோன், மயக்கம், மற்றவர்களிடம்
மயங்குதல்,ஈர்ப்பு,விட்டுக்கொடுக்கும் குணம்,அரவணைக்கும்
வாழ்க்கை,பாசம்,பாசம்,உணர்ச்சிவாய்படுதல் தமது செயல்களால் மற்றவர்களை
மகிழ்ச்சிப்படுத்துதல்,கேளிக்கைகள்,சூதாட்டம்,சினிமா,நாடகம்,இசை,எதையும் அளவிற்கு
அதிகமாக வர்ணணை செய்தல்,மென்மையான உணர்வுகள் போன்ற பல காரகங்களை தன்னிடத்தே
கொண்டுள்ளது 5ம் பாவம் ஆகும்.
7ம் பாவம் பாவம் என்பது ஒருவருடன் இணைந்து செயல்படுவதை
குறிக்கும்,ஜாதகர் ஸ்பரிச சுகத்தை மற்றொருவருக்கு கொடுத்து அவரிடம் இருந்து
பெறுவதை குறிக்கும்.தம்மிடம் உள்ளதை மற்றவர்களிடம் பகிர்ந்துக்கொள்வதை குறிக்கும்.தனக்கு
சமமானவர்களுடன் பழவதைகுறிக்கும்.
ஏனெனில் 7ம் பாவம் பாதிக்கபட்டுருக்கும் பொழது மேலே
குறிப்பிட்டுள்ள 7ம் பாவ காரகத்தை ஒருவரல் அனுபவிப்பதில் பிரச்சனைகள் ஏற்படும் அதை
ஈடுகட்டவே 5ம் பாவம் தன்னுடைய பாவத்திற்கும லக்னத்திற்கும சாதகமான பாவங்களை
தொடர்பு கொண்டுயிருந்தால் ஜாதகருக்கு 7ம் பாவத்தால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து
ஒரளவுக்கு மீளமுடியும்.
5ம் பாவ உப நட்சத்திரமாக குரு இருந்து அவர் நின்ற
நட்சத்திரம்,உப நட்சத்திரம் மூலமாக 4,8,10,12ம் பாவங்களை தொடர்பு கொண்டு 5ம்
பாவத்தில் உள்ள அகம் சார்ந்த விஷயங்களை ஜாதகர் அனுபவிப்பதற்கு எதிராக உள்ளது.
விதி 10
7ஆம் பாவ உபநட்சத்திர அதிபதி தான் நின்ற நட்சத்திரம்
உபநட்சத்திரம் மூலமாக 6,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டால் 7ம் பாவம் 60 சதவீதம்
பாதிப்பு அடைந்து ள்ளது?இவ்வாறு 7ம் பாவம் பாதிக்கபட்டுயிருக்கும்
பொழுது,கண்டிப்பாக சுக்கிரன் 7ம் பாவம் தொடர்பு கொண்ட பாவங்களுக்கு 12ம் பாவங்களை
தொடர்பு கொண்டால் தான் 7ம் பாவத்தில் உள்ள சுக்கிரனின் காரகங்களை முழுமையாக
அனுபவிக்கமுடியும், 5,7,11ம் பாவங்களை தொடர்பு கொண்டுயிருக்கவேண்டும்.பாவம் என்பது புறம் சார்ந்தவையாகும்.கிரக காரகம் என்பது அகம் சார்ந்தவை
ஆகும்.தெளிவாக சொல்வத னால் பாவம் என்பது பகல் பொழுதை குறிக்கும்.கிரக
காரகம் என்பது இரவுபொழுதை குறிக்கும்.அதாவது பகல்யெல்லாம் சண்டைபோட்டாலும்
தன்னுடைய காம சேவையை பூர்த்தி செய்துக்கொள்வதற்காகவாது இரவு நேரத்தில்
விட்டுக்கொடுத்துபோவார்கள் என்பதற்காவே சுக்கிரன் 7ம் பாவம் தொடர்பு கொண்ட
பாவங்களுக்கு 12ம் பாவங்களை தொடர்பு கொள்ளவேண்டும்.
சுக்கிரன்9,12ம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக இருந்து
நின்ற நட்சத்திரம்,உப நட்சத்திரம் மூலமாக 2,4,8,10ம் பாவங்களை தொடர்பு கொண்டு 7ம்
பாவத்தில் உள்ள அகம் சார்ந்த விஷயங்களை ஜாதகர் அனுபவிப்பதற்கு எதிராக
உள்ளது.பொதுவாக உலகில் உள்ள அனைத்துவிதமான சிற்றின்பங்களுக்கு அதிபதியான சுக்கிரன்
கடுமையாக பாதிக்கபட்டுள்ளது.
விதி 12
மதி என்ற தசை புத்தி விபரம்
7ம் பாவம் பாதிக்கபட்டுயிருந்து ஜாதகருக்கு பிறந்த
முதலே நடக்கும் தசை இரட்டைப்படை பாவங்களை கொண்டு நடக்கும் பொழுது ஜாதகருக்கு
காலதாமதமான திருமணம் நடக்கும்.அதுவும் 7ம் பாவத்திற்கு பாதகமானதுமான 2,6ஆம்
பாவங்களை தொடர்பு கொண்டு தசை நடக்கும் பொழுது ஜாதகர் திருமணத்தை
நிராகரிப்பார்,அதுவே லக்னத்திற் தீமையான 8,12 ஆம் பாவங்களை தொடர்பு கொண்டு தசை
நடக்கும் பொழுது ஜாதகர் திருமண செய்துக்கொள்ள எவ்வளவு முயற்ச்சி செய்தாலும்
மற்றவர்களால் ஜாதகர் நிராகரிக்கபடுவார். ஜாதகருக்கு திருமணம் காலதாமதம்
ஆகிகொண்டேயிருக்கும்.சழூகத்தால் அசிங்கம்,அவமானங்களை சந்தித்துக்
கொண்டுயிருப்பார்.
ஒற்றைப்படை பாவங்கள் தொடர்பு கொண்டு தசை நடக்கும்
பொழுது தன்னுடைய அணியின் பாவங்களின் பலனை இரட்டிப்பு செய்து அந்த பாவ பலன்களை
வலிமை யாகவும் நடந்தும், ஒற்றைப்படை பாவங்கள் தொடர்பு கொண்டு தசை நடக்கும் பொழுது
அந்த தசையில் பொதுவாக இரட்டைப்படை பாவங்களின் பலன் சராசரி யளவே
நடக்கும்,இரட்டைப்படை பாவங்கள் தொடர்பு கொண்டு தசை நடக்கும் பொழுது தன்னுடைய
அணியின் பாவங்களின் பலனை இரட்டிப்பு செய்து அந்த பாவ பலன் களை வலிமையாகவும்
நடந்தும், இரட்டைப்படை பாவங்கள் தொடர்பு கொண்டு தசை நடக்கும் பொழுது அந்த தசையில்
பொதுவாக ஒற்றைப்படை பாவங்களின் பலன் சராசரியளவே நடக்கும்,
ஜாதகருக்கு திருமணம் நடந்த தேதி 06.12.2009
அப்பொழது ஜாதகருக்கு வயது 36 வயது 8 மாதம் 11 நாட்கள் ஆகும்.ஜாதகருக்கு 16 வயது
முதல் சுக்கிர தசை நடக்கிறது.
சுக்கிரன்9,12ம் பாவங்களுக்கு உப
நட்சத்திரமாகவும்,1,2,7ம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாகவும்,3,7,11ம்
பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாகவும் உள்ளார், சுக்கிரன் நின்ற நட்சத்திரம்,உப
நட்சத்திரம் மூலமாக 2,4,8,10ம் பாவங்களை தொடர்பு கொள்கிறார்.
சுக்கிரன் தொடர்பு கொண்டுள்ள 2,4,8,10ம் பாவங்கள்
சுக்கிரன் கையில் உள்ள 12,2ம் பாவங்களுக்கு சாதகமாகவும் பாவங்களாக உள்ளதால் 2,12ம்
பாவங்கள் வலிமைபெறும்,சுக்கிரன் கையில் உள்ள 1,3,7,9,11ம் பாவங்களில் உள்ள அகம்
சார்ந்த விஷயங்களை கெடுத்துக்கொண்டு அந்த பாவங்களில் உள்ள புறம் சார்ந்த காரகங்களை
ஜாதகர் அனுபவிப்பார்.
சுக்கிரன் 7ம் பாவத்திற்கு உபஉப நட்சத்திரமாகவும்,7ம்
பாவத்திற்கு ஆரம்பமுனை நட்சத்திரமாகவும் ,இருந்து2,4,8,10ம் பாவங்களை தொடர்பு
கொண்டுள்ளதால் 7ம் பாவத்தின் விதி கொடுப்பினை பாதிக்கபட்டுள்ளது.அந்த
விதிக்கொடுப்பினையே மதி என்ற தசையாதக ஜாதகருக்கு 16 வயதில் இருந்து நடந்தால்
ஜாதகருக்கு சுக்கிர தசையில் திருமணம் நடக்கவில்லை என்பது தெளிவாகிறது.
ஒரு பாவத்தில் உள்ள காரக கிரகம் அந்த பாவத்திற்கே உப
நட்சத்திரமாகவோ அல்லது உபஉப நட்சத்திரமாகவோ அல்லது ஆரம்பமுனை நட்சத்திரமாகவோ
இருந்து அந்த பாவத்திற்கு 8,12ம் பாவங்களையோ அல்லது லக்னத்திற்கு 8,12ம்
பாவங்களையோ தொடர்பு கொண்டால் அந்த பாவ காரகங்களை ஜாதகர் அனுபவிப்பதற்கு முழுமையாக
மறுக்கும்.இதுவே காரகோபாவநாசி என்று
கூறுவர்.
7ம் பாவத்தில் உள்ள அகம் சார்ந்த விஷயங்களை ஜாதகர்
அனுபவிப்பதற்கு எதிராக உள்ளது.பொதுவாக உலகில் உள்ள அனைத்துவிதமான
சிற்றின்பங்களுக்கு அதிபதியான சுக்கிரன் கடுமையாக பாதிக்கபட்டுள்ளது.
விதி 13
7ம் பாவம்,5ம் பாவம்,1ம் பாவம்,சுக்கிரன்,நடப்பு தசைகள்
7ம் பாவத்திற்கு பாதகமாக இருந்து இரண்டு புத்திகள் வலிமையாக ஒற்றைப்படை பாவங்களை
தொடர்பு கொண்டு நடந்தாலும் ஜாதகருக்கு திருமணம் நடக்காது.
ஜாதகர் நகரத்தில் வசித்தால் ஆணாக இருந்தால் 40
வயிதிற்கு மேலும் திருமணம் நடக்கும்.
ஜாதகர் நகரத்தில் வசித்தால் பெண்ணாக இருந்தால் 35
வயிதிற்கு மேலும் திருமணம் நடக்கும்.
ஜாதகர் கிராமத்தில் வசித்தால் ஆணாக இருந்தால் 35
வயிதிற்கு மேலும் திருமணம் நடக்கும்.
ஜாதகர் கிராமத்தில் வசித்தால் பெண்ணாக இருந்தால் 30
வயிதிற்கு மேலும் திருமணம் நடக்கும்.
ஆனால் திருமண வாழ்க்கையில் பிரச்சனைக்குரிதாக
இருக்கும்.
ஜாதகருக்கு
திருமணம் நடந்த தேதி 06.12.2009 அப்பொழது ஜாதகருக்கு வயது 36 வயது 8 மாதம் 11
நாட்கள் ஆகும்.ஜாதகருக்கு 16 வயது முதல் சுக்கிர தசை நடக்கிறது.
விதி 16
7ஆம் பாவ உபநட்சத்திர அதிபதி தான் நின்ற நட்சத்திரம்
உபநட்சத்திரம் மூலமாக 6,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டால் 7ம் பாவம் 60 சதவீதம்
பாதிப்பு அடையும்.
ஒரு பாவத்தை உடனே துண்டிக்கும் அதனுடைய 12ம் பாவம்
வலிமையை பொறுத்து, ஆய்வுக்குரிய பாவத்தின் பாதிப்பின் தன்மையை ஆராய வேண்டும்.
ஆய்வுக்குரிய
பாவம் பாதிக்கபட்டுள்ள போது அந்த பாவத்தின் 8,12ம் பாவங்கள் வலிமையாக இருக்ககூடாது
என்பது சிறப்புவிதியாகும்.
இதன்பொருள் ஒரு பாவம் வலிமையாக இருக்கும்பொழது அது
தன்னுடைபாவத்திற்கு 2,6ம் பாவங்களை பாதிக்கும் செயலை செய்யும்.
6ம் பாவம் 4,6,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டுயிருக்கு
பொழுது 6ம் பாவ தசையில் 6ம் பாவம் தன்னுடைய பாவத்திற்கு 2,6ம் பாவங்களான
7,11(7,11ம் பாவங்களுக்கு 8,12ம் பாவங்களாக 6ம் பாவம் வரும்)அதனால் 7,11ம்
பாவங்களை கெடுக்கும் வேளையை செய்யும்.
ஏற்கனவே 7ம் பாவம் பாதிக்கபட்டுள்ளபொழுது 6ம் பாவம்
வலிமையாகயிருக்கும் பொழுது 7ம் பாவத்தின் மீது கூடுதலாக பாதிப்பை 6ம் பாவம் தரும்.
இந்த ஜாதகத்தில் 3,6ம் பாவங்களுக்கு சூரியன் உப
நட்சத்திரமாக இருந்து நின்ற நட்சத்திரம் மற்றும் உப நட்சத்திரம் மூலமாக
8,4,8,12ம் பாவங்களை
தொடர்பு கொண்டுள்ளது.சூரியன் தன்னுடைய கையில் உள்ள 3ம் பாவத்தில் அகம் சார்ந்த
காரகங்களுக்கு முழுமையான தீங்கையும்,3ம் பாவத்தில் உள்ள புறம் சார்ந்த காரகங்களான
தைரியம்,பராகர்மம்,அகன்ற தோள்பட்டைகள், கைகள் மூலமாக தாக்குதல் தொடுத்தல் போன்ற
பலவற்றை 8,4,8,12ம் பாவங்கள் என்பது பெரியளவில் வளர்க்கும்,சூரியன் வைத்துள்ள மற்றொரு
பாவமான6ம் பாவத்திற்கு 8,4,8,12ம் பாவங்கள் பரிமாணபாவங்களாக இருப்பதால் 6ம்
பாவத்தில் உள்ள அகம் சார்ந்த விஷயங்களில் ஜாதகருக்கு முழுமையான தீங்கை தரும்,புறம்
சார்ந்த காரகங்களான வேளையில் பிரச்சனைகள்,குறைந்தபட்ச ஊதியம்,வழக்கு,கடன்,எதிரிகள்
ஏற்படும், ஜாதகர் யாருமனும் இணைந்து வாழமாட்டார்.
சூரிய தசை ஜாதகருக்கு 36 வயதி முதல்
நடந்தது. ஜாதகருக்கு திருமணம் நடந்த தேதி 06.12.2009 அப்பொழது ஜாதகருக்கு வயது 36
வயது 8 மாதம் 11 நாட்கள் ஆகும்.ஜாதகருக்கு சூரிய தசையில் சந்திர புத்தில் ராகு
அந்திரத்தில் திருமணம் நடந்த்து.ஜாதகரின் விதிக்கொடுப்பினையும்
பாதிக்கபட்டு,சுக்கிரனும் பாதிக்கபட்டு,1ம் பாவமும் பாதிக்கபட்டு இருந்து நடப்பு
தசையும் முழுமையாக பாதிக்கபட்டுயிருந்தால் ஜாதகரால் திருமண வாழ்க்கை ஒன்றரை ஆண்டுகள் மேல்
வாழ்முடியவில்லை 2011ஆண்டு முதல் இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள்.
விதி 21
1,3,5,7,9,11ம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக இருந்து
4,6,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டுயிருக்கும்பொழுது 1ம் பாவம் என்பது ஜாதகர்
அனுபவிக்கும் ஒட்டுமொத்த இன்பத்தை குறிக்கும்,3ம் பாவம் சூழ்நிலைகளுக்கு ஏற்ப
மற்றவர்களுடன் வளைந்து கொடுத்தல்,விட்டுகொடுத்தல்,அப்கிரேடு,5ம் பாவம் என்பது
ஜாதகரின் பொழுதுபோக்கு விஷயத்தில் ஈடுபாட்டை குறிக்கும்,சிற்றின்பத்தை
குறிக்கும்,ரசனை,காதல், உல்லாச, சல்லாபத்தை குறிக்கும்,7ம் பாவம் மற்றவர்களுடன்
இணைந்து செயல்படுதல், பரிமாறிக்கொள்வது,ஸ்பரிச சுகத்தை நாம் மற்றவர்களுக்கு
கொடுத்து அவரிடம் பெறுதலை குறிக்கும்,9ம் பாவம் என்பது தெய்வ
அனுகிரகத்தையும்,இரண்டாவதாக ஒரு பெண்ணுடன் உள்ள தொடர்பை குறிக்கும், 11ம் பாவம்
என்பது திருப்தி, நண்பர்கள்,கேளிகை,உல்லாசத்தை குறிக்கும் இந்த பாவங்கள்
இரட்டைப்படை பாவங்களை தொடர்பு கொள்ளும்பொழுது இந்த பாவங்களில் உள்ள அகம் சார்ந்த காரகங்களை கெடுத்துக்கொண்டு புறந்த சார்ந்த
காரங்களையில் ஜாதகர் அதிகமாக ஈடுபடுவார்.
இந்த ஜாதகத்தில் 1,3,5,7,9,11ம் பாவங்கள் முழுமையாக
பாதிக்கபட்டதால் ஜாதகரின் திருமண வாழ்க்கை துன்பங்கள் நிறைந்த்தாகவே இருந்தது. ஒன்றரை ஆண்டுகள் மேல்
வாழ்முடியவில்லை 2011ஆண்டு முதல் இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள்.
விதி 23
7ம் பாவத்தின் உப நட்சத்திரம், உப உப நட்சத்திரம்,7ம்
பாவத்தின் ஆரம்பமுனை நட்சத்திரம் மூன்று 6,8,12ம் பாவங்களை தொடர்பு
கொண்டுயிருந்தால்,7ம் பாவம் 100 சதவீதம் பாதிக்பட்டுள்ளது.7ம் பாவத்திற்கு சாதகமான
ஒற்றைப்படை பாவ தசை நடந்தாலும் 35 வயதிற்கு மேலே திருமணம்
நடக்கும்.விதிக்கொடுப்பினை மறுத்த விஷயத்தை தசையால் கொடுக்கமுடியாது. ஜாதகரால்
சரியான பருவத்தில் அனுபவிக்கமுடியாது.விதிக்கொடுப்பினை மறுத்த விஷயத்தை மதி என்ற
தசையால் ஒரளவிற்கே அனுபவிக்க முடியுமே ஒழிய நீண்ட காலத்திற்கு பிற பாவ விளைவு
மூலமாகவும்,தசை மூலமாகவும் அனுபவிக்க முடியாது.
இந்த ஜாதகத்தில் 7ம் பாவம் 100 சதவீதம் முழுமையாக
பாதிக்கபட்டுள்ளதால் ஜாதகருக்கு 36 வயிதில் திருமணம் ஆயிற்று ஆனால் அவரால் ஒன்றரை
ஆண்டுகள் மேல் அவருடைய வாழ்க்கை துணையோடு இணைந்து வாழமுடியவில்லை.

No comments:
Post a Comment